Saturday 31 August 2013

APPROVAL OF CPMG, TN FOR SECRETARY , STAFF SIDE , RJCM , TAMILNADU

நமது அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர்  தோழர். J .R . அவர்கள்  , நீண்ட இடைவெளிக்குப் பிறகு  தற்போது  மாநில கூட்டு ஆலோசனைக் குழுவின் ஊழியர் தரப்பு செயலராக  இலாக்காவால்  .அங்கீகரிக்கப் பட்டார் . இதன் மூலம் இனி ஊழியர் தரப்பு பிரச்சினைகளை  மாநில கூட்டு ஆலோசனை குழு கூட்டத்தில் நம்மால் முழுமையாக  எடுத்துச் செல்ல  இயலும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 


தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள்.  உங்கள் கோட்ட/கிளைகளில் தீர்க்கப் படாமல் உள்ள பொதுப் பிரச்சினைகள் (தனி நபர் பிரச்சினைகள் அல்ல ) , இலாக்கா விதி மீறிய  உத்திரவுகள் ,  ஊழியர் சேம  நலன்  சம்பந்தப் பட்ட பிரச்சினைகள்  இப்படி மாநில அளவில் எடுக்கக் கூடிய பிரச்சினை எதுவாக இருந்தாலும் அவற்றை தெளிவாக  நீங்களோ அல்லது உங்கள் SYSTEM ADMINISTRATOR  அல்லது  E -MAIL  அனுப்பத் தெரிந்த தோழர் மூலமோ  நம்முடைய  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்திற்கு  எதிர்வரும் 08.09.2013 க்குள் கிடைக்குமாறு  அனுப்பிட வேண்டுகிறோம். 

ஆட்பற்றாக்குறை பிரச்சினை   என்பதை  உரிய புள்ளி விபரங்களுடன் அளித்திட வேண்டுகிறோம் . ஏனெனில் இந்தப் பிரச்சினையில்  ஏற்கனவே பலமுறை சரியான  தகவல்  தராததால், நம் கோரிக்கை  இழுத்தடிக்கப் பட்டு  நிராகரிக்கப் பட்டது என்பதை நினைவில் கொள்ளவும் . 

அது  P 4, R 3, R 4, ADMIN  , ACCOUNTS , SBCO, GDS   பிரச்சினைகளாக இருந்தாலும் அந்த அந்த மாநிலச் செயலர்களுக்கு  பிரச்சினைகளை அனுப்பி , அதன் நகலை மட்டும்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்க முகவரிக்கு தவறாமல்   அனுப்பிடக் கோருகிறோம் .

 மின்னஞ்சல் முகவரி :  aipeup3tn@gmail.com

தயவு செய்து அலட்சியப் படுத்தாமல்  , கால தாமதப் படுத்தாமல்  இந்த செயலை செய்திட வேண்டுகிறோம்.  நிச்சயம் உங்கள் பிரச்சினை எதிர்வரும் 10.09.2013 க்குள்  மாநில கூட்டு ஆலோசனை குழு கூட்டத்தின் விவாதத்திற்கு வைக்கப் படும் . இப்போது விடுபட்டால்  இனி அடுத்த  4 அல்லது 5 மாதம் கடந்த பின்னரே  மறுபடியும் பிரச்சினை வைக்க முடியும் ஏற்கனவே எடுக்கப் பட்டு தீர்க்கப் படாத பிரச்சினைகள் ஆனாலும் மீண்டும் அதனை எழுப்பிட  நிச்சயம் முயற்சிக்கிறோம். எனவே அதனையும் கருத்தில் கொள்ளவும் .

RJCM  என்பது மாநில அளவில் உச்ச மட்ட அமைப்பு என்பதால்  நிச்சயம் பல பிரச்சினைகளை இதில் எடுத்துச் சென்று பேசி தீர்த்திட சட்ட ரீதியாக வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் கொண்டிட  வேண்டுகிறோம். இதர  மத்திய அரசு , மாநில அரசு , பொதுத் துறைகளில் இப்படிப் பட்ட வாய்ப்புகள்  மறுக்கப் பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டுகிறோம். 

எனவே இந்த அமைப்பை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள உங்களின்  ஒத்துழைப்பை வேண்டுகிறோம்.  இந்த செய்தியை , இதனை படிக்கும் அனைத்து  தோழர்களும் தங்கள் பகுதியில் உள்ள நிர்வாகிகள் படிக்காமல் இருந்தால், அவர்களுக்கு  தெரிவித்து முழுமையாக  உபயோகப் படுத்திக் கொள்ளவும்.

ஒருபுறம் நாம் வாதாடும் களம் !  
முடியவில்லையானால் போராடும் களம் !
நிச்சயம்  பிரச்சினையை தீர்த்திட முயலுவோம் !

நன்றியுடன் 
மாநிலச் செயலர் அஞ்சல் மூன்று , 
தமிழ் மாநிலம் .


No comments: