Wednesday 12 December 2012

வெற்றி! வெற்றி!! வெற்றி!!! ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் மதுரையில் மாபெரும் வெற்றி!!!!

மதுரைக் கோட்டத்தில் 22 அஞ்சல் அலுவலகங்கள் முற்றிலும் அடைக்கப்பட்டன.....

மதுரைக் கோட்டத்தில் மட்டும், 252 அஞ்சல் தோழர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.

மாற்றுச் சங்கத் தோழர்களும் கலந்து கொண்டது மிகவும் வரவேற்கத்தக்கது.

மதுரை மண்டலத்தில், திண்டுக்கல், மதுரை, ராம்நாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வெலி, விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ஆகிய கிளைகளில் 95% அதிகமான ஊழியர்கள் வேலை நிறுத்ததில் கலந்து கொண்டனர்.

இது 15 அம்சக் கோரிக்கைகளை வேண்டியும், தொழிலாளர்களுக்கு எதிரான அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான இந்த வேலை நிறுத்தத்தில் தென்மண்டலத்தின் மாபெரும் வெற்றி. இது போன்ற ஒற்றுமை இனிவரும் காலங்களிலும் தொடரும்.

போராட்டத்தில், கலந்து கொண்ட அனைத்து தோழர்களூக்கும், தென் மண்டல செயலர், மற்றும் மாநில சங்கத்தின் சார்பாக, வீர வாழ்த்துக்களையும், நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி!                நன்றி!!                      நன்றி!!!

No comments: