அன்புத் தோழர்களே... தோழியர்களே....
தென் மண்டலத்தில் நடக்கும் காட்டாட்சியை எதிர்த்தும், இரு மாதப் பேட்டிகளை சடங்காக நடத்திடும் போக்கினை கண்டித்தும், இலாக்கா உத்தரவுகளை குப்பையில் போட்டு, ஊழியர் விரோதப் போக்கினை கையாளும் கொடுங்கோல் ஆட்சியினைக் கண்டித்தும், பலமுறை மண்டல நிர்வாகத்திற்கு கோரிக்கைகளை அளித்தும், செவிமடுக்காமல், சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்து வரும் ஊழியர்களை காக்க 10.01.14 அன்று காலை 10 மணி முதல் மாபெரும் அளவில் தொடர் முழக்கப் போராட்டத்தினை தென் மண்டல அலுவலக வாயிலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
05.01.14 நடைபெற்ற RMS, P3, P4, GDS கோட்ட கிளைச் செயலர்களின் கூட்டத்தின்போதும், போராட்ட உணர்வோடு, ஊழியர்களைக் காக்க, நேரந் தவறாமல், சரியாக 10 மணியளவில், தென் மண்டல அலுவலக வாயிலில், மண்டலந்தோறும் ஊழியர்களைத் திரட்டி போராட்டத்தினை புரட்சிகரமாகவும், வெற்றி பெறவும் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பெருந்திரளாக திரள்வீர்..... உரிமைகளை வென்றெடுப்பீர்....


No comments:
Post a Comment
YOUR COMMENTS ARE VERY VALUABLE TO US. PLEASE WRITE YOUR COMMENTS AND GRIEVANCES IF ANY TO RUN THE TRADE UNION HEALTHY.